ஜம்மு - காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு - காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்புப் பிரிவை 2019-ஆம் ஆண்டு நீக்கிய மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்ககு விசாரணை முடிவுற்ற நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுத்து, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!