வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது இந்தியா: ராஜ்நாத்

புதுடெல்லி: உலகில் தற்போது விரைவாக வளர்ந்து வரும் பெரும் பொருளியல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிற உலக நாடுகளின் வளர்ச்சியில் பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி உள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் 96ஆவது வருடாந்திர பொதுக்கூட்ட நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், உலக நாடுகளுக்கு ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை இந்தியா வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.

“கடந்த 20ஆம் நூற்றாண்டில் உலகளவில் வளர்ச்சி இயந்திரத்திற்கான நாடாக அமெரிக்கா தனது பங்கை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபது ஆண்டுகளுக்கு சீனா அதே பணியை ஆற்றியது.

“தற்போது இந்தியா மிகப் பெரிய பொருளியலைக் கொண்டுள்ளதால் உலக அளவில் அடுத்த வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது. இந்தத் தருணத்தில் இவ்வாறு கூறுவது மிகப் பொருத்தமானது.

“21ஆம் நூற்றாண்டை இந்தியாவுக்கான நூற்றாண்டாக மாற்ற வர்த்தகத் தலைவர்கள் இந்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

இதே கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு நோக்கங்கள், வருங்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுயசார்பு மிக அவசியம் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!