ஆசிர்வாதம் வழங்கும் இடத்தில் அசம்பாவிதம்

உத்தரப் பிரதேசம்: திருமண ஊர்வலம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் திருமண விருந்தில் கலந்துகொண்ட அறுவரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில், குற்றம் புரிந்த ஆறு பேரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நடந்ததாகவும் திருமண ஊர்வலம் கேத்தாசரை நகரத்தை வந்தடைந்த பிறகு, அஜய் பிரஜபதி, அவரின் சகோதரர் அங்கித் இருவரையும் அதே விழாவில் கலந்துகொண்ட ஆறு விருந்தினர்கள் மது அருந்துவதற்காக அணுகியதாகவும் ஷாகஞ்ச் வட்டாரக் காவல் அதிகாரி சுபம் தோடி குறிப்பிட்டார்.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இரு சகோதரர்களையும் ஆறு பேர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சகோதரர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சகோதரர்களின் உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகளைக் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அறுவரைக் கைது செய்தனர். இதனால், அறுவரில் மூவரின் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!