இளநீர்களைக் காரில் வந்து திருடிய ஆடவர்

கிரிநகர்: பெங்களூரின் கிரிநகர் வாட்டாரத்தில் உள்ளது ஹனுமந்தநகர்.

அங்கு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடைகளில், இரவு நேரத்தில் இளநீர் அடிக்கடி திருடப்பட்டது. அதுகுறித்து காவல்துறையிலும் கடை உரிமையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, கிரிநகர் காவல்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாடகைக் காரை அதிகாரிகள் நிறுத்தினர். கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது, காரில் 90 இளநீர்கள் இருந்தன.

இரவு நேரத்தில் காரில் நகருக்குள் வலம் வந்து, இளநீர் கடைகளில் இளநீர்களைத் திருடுவதை வாடிக்கையாக வைத்துக்கொண்டதை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் மோகன் என்றும் அவருக்கு 32 வயது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!