200 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என நினைத்து வாக்களியுங்கள்: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 25ஆம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் சார்பில் 200 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். அவர்களுக்காக குறைந்தது 150 இடங்களுக்காவது பிரசாரம் செய்ய வருமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது.

ஆனால், அவர்களின் அன்புக்கட்டளைக்கு இணங்க என்னால் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடியாது. எனவே, ராஜஸ்தான் மக்கள் இங்குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என நினைத்துக் கொண்டு தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு அளியுங்கள்.

இந்தத் தேர்தலில் உள்ளூர் அளவில் யார் போட்டியிடுகின்றனர் என்பது முக்கியமல்ல. எனக்கு வாக்களிப்பதாக நினைத்துக்கொண்டு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் அரசாங்கத்தைத் தொடர்

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை தொடரச் செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன். தேர்தலில் உள்ளூர் அளவில் யார் போட்டியிடுகிறார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டியதில்லை என பேசியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!