கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத்துக்கு மோடி வருவதாகத் தகவல்

அகமதாபாத்: இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண பிரதமர் மோடி நேரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருப்பதால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்திற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியின்போது பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருகையளித்திருந்தார்.

அப்போது அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்த வகையில், 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியைக் காண பிரதமர் மோடி வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!