காவல்துறை அதிகாரியைத் துரத்திக் கேள்வி கேட்ட மாதர்

மோட்டார் வண்டியைத் தலைக்கவசமின்றி ஓட்டிச் சென்ற காவல்துறை அதிகாரியை விடுவதாக இல்லை, இரு பெண்கள்.

சமூக ஊடகங்களில் வலம்வரும் காணொளி ஒன்றில், அந்த அதிகாரியிடம் அவரது தலைக்கவசம் பற்றி மாது ஒருவர் பலமுறை கேட்பதாக உள்ளது.

‘எக்ஸ்’ (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளியில் அமைதியாகத் தன் வண்டியை அந்தக் காவல் அதிகாரி ஓட்டிச் செல்வதாகவும் அவரைத் துரத்திப் பிடித்து மாது கேள்வி கேட்பதாகவும் அமைந்துள்ளது.

தம்மை நோக்கி இரு பெண்களும் என்ன கேட்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் வழிதான் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட அதிகாரி, தமது வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்தியும் விட்டதாகக் காணொளியில் தெரிகிறது.

பின்னர், அவர்களின் கேள்வியைப் புரிந்துகொண்ட பிறகு மீண்டும் வண்டியை ஓட்டிச் சென்றார் அதிகாரி.

இதேபோல் தலைக்கவசமின்றி மோட்டார்வண்டி ஓட்டிச்சென்ற இரு காவல்துறை அதிகாரிகளை இரு பெண்கள் துரத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!