எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி: குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கை விரைந்து முடிக்கும் விதமாக அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தாமாக முன்வந்து தங்கள் தலைமையில் சிறப்பு அமர்வை உருவாக்கி விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்ந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி உபதயாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!