புதுடெல்லி: டெல்லியில் உள்ள இங்கிலாந்துத் தூதரகம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது.
அனைத்துலகப் பெண் குழந்தை தினத்தை (அக்டோபர் 11ஆம் தேதி) கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஸ்ரேயா தர்மராஜன் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் ஒருநாள் முழுவதும் இந்தியாவுக்கான இங்கிலாந்துத் தூதர் ஆனார். இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் தூதரான 7வது பெண் ஸ்ரேயா தர்மராஜன் ஆவார்.
டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள ஸ்ரேயா, தற்போது மும்பையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.