மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் டோம்பிவிலி பகுதியில் பங்ளாதேஷை சேர்ந்த பெண் ஒருவர் சிறை வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஏழு பங்ளாதேஷ் பெண்களை மீட்டனர்.
காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பி காட்டுக்குள் அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
காவல்துறை மேற்கொண்ட தொடர் தேடுதல் வேட்டையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 24 முதல் 40 வயதுடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.