விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: தூய்மை, மின்னிலக்கப் பரிவர்த்தனை, உள்நாட்டு பொருள்களுக்கு ஆதரவு ஆகியவை தொடர்பான காணொளிகளை வெளியிட்டு அதன் மூலம் இந்திய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி யூடியூபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூறினார்.

தனது யூடியூப் ஒளிவழியில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த அறிவுரையை வழங்கினார்.

இந்தியாவில் ஏராளமான மக்களை யூடியூப் எட்டுகிறது என்பதைச் சுட்டிய அவர், இந்தத் தாக்கத்தை இன்னும் பயனுள்ள வழிகளில் நாம் மாற்ற வேண்டும் என்றார்.

யூடியூபர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு நல்லவற்றை எளிதாகப் போதித்து அவர்களிடம் புரிந்துணர்வை மேம்படுத்தி ஆக்ககரமான செயல்களில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

தூய்மை, மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை, இந்தியப் பொருள்களை வாங்குவது என்ற உணர்வு ஆகியவற்றை மக்கள் முக்கியமானதாகக் கருத வேண்டும். இதை யூடியூபர்கள் சாதிக்க வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்திக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!