கேரளா: போதையில் இருந்த 26 ஊழியர்கள் வேலைநீக்கம்

திருவனந்தபுரம்: மது அருந்திவிட்டு வேலைக்கு வந்த 100 பேர்மீது கேரள அரசுப் போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தற்காலிகப் பணியாளர்கள் 26 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்; 74 நிரந்தரப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் போதையில் வேலைக்கு வந்துள்ளனரா, பணியிடத்தில் மதுபானம் வைத்திருக்கிறார்களா என இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிவரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவு சோதனை நடத்தியது.

அச்சோதனைகளின்போது மது அருந்தியிருந்ததாக அல்லது வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டவர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிலைய மேலாளர் ஒருவர், வாகன மேற்பார்வையாளர்கள் இருவர், பாதுகாவலர் ஒருவர், 22 பேருந்து நடத்துநர்கள், 39 பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தவிர்த்து, ‘மது அருந்தியிருக்கவில்லை’ என்பதை உறுதிப்படுத்திய பிறகே மற்றவர்களுக்குப் பணிகளை ஒதுக்க வேண்டும் என்று மாநிலப் போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!