டிடிவி தினகரன் வென்றால் தமிழக அரசியல் மாறும்: அண்ணாமலை

தேனி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து அமமுக போட்டியிடுகிறது.

இதனையடுத்து, தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, “தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை. கட்சியில் இருந்து வேறு யாராவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்,” என்று அண்ணாமலை கூறினார்.

அத்துடன், ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் தினகரனைப் பிடிக்காது என்றும் அவர் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும் என்றும் அண்ணாமலை சொன்னார்.

ஜூன் 4ஆம் தேதி தினகரன் வெற்றி பெற்ற பிறகு உண்மையான, மக்களைச் சார்ந்த அரசியல் நடக்கும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!