தனது சகோதரரைப் போலவே, கணவர் ஜெகத் தேசாயும் தன்னுடைய உணவைத் திருடிச் சாப்பிடுவதாக சமூக ஊடகத்தில் நையாண்டி செய்துள்ளார் நடிகை அமலா பால்.
சிறு வயதில் இவரது சகோதரர் இவருக்காக வைக்கப்படும் உணவை, யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுவிடுவாராம்.
“இப்போது என் கணவரும் அப்படித்தான் செய்கிறார். இருவருக்குமே என் மீது பாசம் அதிகம்.
“உங்கள் வீட்டிலும் இதுபோல் யாரேனும் பிறரது உணவைச் சாப்பிடுவார்களா,” என்று சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலா பால்.