பிரதமர் பதவிமீது ஆசைப்படும் ராஷி கண்ணா

‘முதல்வன்’ படத்தில் ஒரு நாள் முதல்வராக நடிகர் அர்ஜுன் நடித்ததைப் போல், தனக்கும் ஒரு நாளாவது பிரதமர் பதவியில் அமர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், தமிழ் என நான்கு மொழிகளிலும் தொடர்ந்து பரபரப்பாக நடித்துவருபவர் ராஷி கண்ணா.

தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். `அரண்மனை 3’ படத்தில் நடித்தவர், விரைவில் வெளிவரவுள்ள ‘அரண்மனை 4’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நடிப்பு ஒருபக்கம், சமூக சேவை ஒரு பக்கம் என பரபரப்பாக செயல்பட்டு வரும் ராஷி கண்ணா, கொவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்தார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனது விருப்பங்களையும் வெளிப்படையாக சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனமாட வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கையுடைய ஆடவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் முன்பொரு முறை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்.

தற்போது இதேபோல் தனது ஆசையை ஊடக நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷி கண்ணா.

“நல்ல அரசியல் ஆளுமை கொண்ட பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

“இன்றைய சூழலில் இளைஞர்கள் யாரும் அரசியல் பக்கம் தலைகாட்ட விரும்புவது இல்லை.

“ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையையும் அவருடைய செயல்களையும் பார்த்து இளைஞர்கள் அரசியல் மீது ஆர்வம் காட்டுவார்கள் எனில் அதுபோன்ற ஒரு வேடத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன்.

“குறிப்பாக பிரதமராக இருப்பது பற்றி நான் யோசித்திருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு நாளாவது பிரதமராக இருக்கவேண்டும் என்ற தணியாத ஆசையும் எனக்குண்டு,” என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.

அரண்மனை 4’ அனுபவம் குறித்து கூறுகையில், “இரண்டாவது முறையாக அரண்மனைக்குள் போயிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளின்படி அடித்து துவம்சம் செய்துள்ளேன்.

“நான் வாகனத்தில் போகும்போது என்னை பேய் ஒன்று தூக்கிக்கொண்டு போகும். அந்தக் காட்சி பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். ஆனால், அதனைத் தயாரிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இப்படி பல காட்சிகள் இந்தப் படத்தில் எனக்கு உள்ளது.

“இத்திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இப்படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்,” என்கிறார்.

“இயக்குநர் சுந்தர்.சி கதை சொல்வதை நான் கேட்க விரும்பவில்லை. எனது பாத்திரம் பற்றிக்கூட கேட்கவில்லை. ஒரு முறை ஒரு இயக்குநர் மேல் நம்பிக்கை வைத்துவிட்டால், அவர் மோசமான வேடத்தை எனக்குக் கொடுக்க மாட்டார் என உறுதியாக நினைப்பேன்.

“பொதுவாக பல பட வாய்ப்புகள் நடிப்பதற்கு வருகின்றன. ஆனால், நமது கதாபாத்திரம் மற்றவர்கள் மனதில் நிழலாடும் வகையில் அமையும் அருமையான கதாபாத்திரத்தை மட்டும் தான் தேர்வு செய்து நடிக்கவேண்டும்,” என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் மூன்றாவதாக அரண்மனை போன்ற ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருக்கிறார் ராஷி கண்ணா. 33 வயதான இவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர் விளம்பரப் படங்கள், சமூக ஊடகங்கள் மூலமும் கல்லா கட்டி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!