நாயகன், வில்லன்: எதற்கும் தயார் என்கிறார் ஸ்ரீகாந்த்

ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை என்றாலும், தனக்குரிய நல்ல வாய்ப்புகளைப் பெற்று வந்தார் ஸ்ரீகாந்த்.

சங்கரின் ‘நண்பன்’ படத்திற்குப் பிறகு இரண்டு நாயகர்களில் ஒருவராகவும் நடித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் தனிநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் சங்கர் பாரதி இயக்கும் ‘தினசரி’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ராமராஜன் நடித்த ‘மில் தொழிலாளி’ படத்தை தயாரித்த விஜய் முரளிதான் இப்புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

தமிழில் வாய்ப்பு இல்லாததால் சில ஆண்டுகளாக தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார் ஸ்ரீகாந்த்.

தற்போது தமிழில் வில்லனாக நடிக்கவும் அவர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், கால்ஷீட் ஒதுக்குவதில் தாராளம் காட்டுவதாகவும் ஊதியம் தொடர்பாக கறார் காட்டாமல் ஒத்துழைப்பதாகவும் தெரிகிறது. தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!