‘மிஸ்டர் சந்திரமவுலி’ புகழ் நடிகர் சங்கரன் காலமானார்

‘மவுனராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்து, கார்த்திக்கால் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று அழைக்கப்பட்டு பிரபலமான ரா.சங்கரன் புதன்கிழமை காலமானார்.

1974ஆம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் வெளியான ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா.சங்கரன். ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கம் தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தினார். ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘மவுன ராகம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகிகளுக்குத் தந்தையாகவும் நடித்துள்ளார்.

‘மவுனராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என அவரை அப்படத்தின் நடிகர் கார்த்திக் அழைக்கும் காட்சி திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் சங்கரனைப் பிரபலமாக்கியது.

1999க்கு பின் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் 91 வயதாகும் ரா.சங்கரன் புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!