‘லியோ’ படத்திற்கு பிறகு வசூல் ரீதியில் எந்தப் படமும் தங்களுக்கு லாபகரமாக அமையவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிலும் கடந்த இரு வாரங்களாக வெளியான புதுபடங்களின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் மட்டுமே ஓரளவு வசூல் தந்துள்ளது என்றும் படங்களை பற்றி போதுமான அளவில் விளம்பரங்கள் செய்யப்படாதது இதற்கு ஒரு காரணம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
போதாத குறைக்கு மழை வெள்ளமும் சேர்ந்து கொண்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திரை அரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.