அரசியல் மாஃபியா கதைக் களத்தில் நடிக்கும் தனுஷ்

தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இதையடுத்து அவரது 51வது படத்தைத் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குவது உறுதியாகி உள்ளது.

இதில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டனவாம். இது அரசியல் மாஃபியா கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் இப்படத்தை உருவாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, படங்களை இயக்குவதிலும் தனுஷ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

விரைவில் தனது மூத்த சகோதரியின் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறாராம். அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!