தான் நடித்த இந்திப் படம் வெற்றி பெறாததால் தனக்கு வருத்தம் இல்லை என்று கூறியிருக்கிறார் நாக சைதன்யா.
நடிகர் நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர், பிராச்சி தேசாய், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள இணையத் தொடர் ‘தூத்தா’. விக்ரம் கே குமார் இயக்கியுள்ள இந்த மர்மத் தொடர், அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
இதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் அவரின் இந்தி அறிமுகம் சரியாக அமையாதது பற்றிக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, “எனது இந்தி அறிமுகமான ‘லால் சிங் சத்தா’ சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
“அந்தப் படத்தில் அமீர்கானுடன் நடித்தபோது நிறையக் கற்றுக்கொண்டேன். அதனால் அதில் நடித்ததில் மகிழ்ச்சிதான்.
“வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் சகஜம். வெற்றி தோல்வி இரண்டையும் சுயபரிசோதனை செய்துகொள்வது முக்கியம். அதைத் திரும்பிப் பார்ப்பதை விட்டுவிட்டுக் கடந்து செல்வது முக்கியம்” என்றார் நாக சைதன்யா.