பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட யுகேந்திரன், அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியானதும் அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த யுகேந்திரன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் தங்கிவிட்டார்.
பின்பு சினிமா பக்கமே வராத இவருக்கு தற்போது தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்தியா வந்து, அந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.
நான்காவது வாரத்தில் அந்தப் போட்டியில் இருந்து வெளியேறினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அதுவும் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார். முன்பு ‘திருப்பாச்சி’ படத்தில் அவருடன் நடித்திருந்தார் யுகேந்திரன்.
தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கும் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார் யுகேந்திரன்.