ஐஸ்வர்யா ராய்யை அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது அவரது அண்மைய புகைப்படம்.
பாலிவுட் பயில்வான் ரங்கநாதனாக இருக்கும் உமர் சந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து பேசியுள்ளது மட்டுமன்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று, உமர் சந்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுதவிர, அண்மையில் ஓர் ஊடக நிகழ்வில் காணப்பட்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டகிராமில் பின்தொடரவில்லை.
இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும் அவர்கள் பிரிந்து செல்லத் தயாராகி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. இருந்தாலும் அபிஷேக் பச்சனின் கைவிரலில் திருமண மோதிரம் இல்லாத அவரது புகைப்படத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.