மிசோரம்: மிசோரம் சட்டப்பேரவைத் தோ்தலில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிஸோ தேசிய முன்னணி 10 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றிபெற்றன.
ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவா் லால்டுஹோமா, சொ்சிப் தொகுதியில் வெற்றி பெற்றாா்.
இந்த வெற்றிக்குப் பிறகு ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான லால்டுஹோமா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்த முறை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். எனது அரசாங்கம் பெண்களால் அமைக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். மேலும் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” எனக் கூறியுள்ளார்.