குடும்பத்துடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார் நயன்தாரா.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளியை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
அவற்றில் குழந்தைகள், கணவர் விக்னேசுடன் அவர் காட்சி அளிக்கிறார்.
“நான் இதற்குமேல் அதிகம் கேட்க முடியாது. கடவுள் என் வாழ்க்கையில் இம்மூவரையும் பரிசளித்திருக்கிறார். ஐ லவ் யூ விக்கி” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.