இயல்பு நிலைக்குத் திரும்பிய தோக்கியோ விமான நிலையம்

தோக்கியோ: தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

ஆறு நாட்களுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த சிறிய விமானம் ஒன்றும் ஓடுபாதையில் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இவ்விபத்தில் கடலோரக் காவற்படை விமானத்திலிருந்த ஆறு ஊழியர்களில் ஐவர் உயிரிழந்தனர்.

பயணிகள் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இவ்விபத்தால், ஹனேதா விமான நிலையத்தில் இருக்கும் நான்கு ஓடுபாதைகளில் விபத்து நடந்த ஓடுபாதை ஜனவரி 2ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விபத்துக்குள்ளான விமானங்களின் சிதைவுகள் அவ்விடத்திலிருந்து பிரான்ஸ், கனடா, பிரிட்டிஷ் நாட்டு ஊழியர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன என்றும் ஓடுபாதை ‘சி’ திங்கட்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது என்றும் தோக்கியோ விமான நிலையத்தின் பேச்சாளர் ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!