பயங்கரவாத அச்சுறுத்தல்: உயர் விழிப்புநிலையில் பிரான்ஸ்

பாரிஸ்: பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலையை பிரான்ஸ் ஆக உயர்நிலைக்கு உயர்த்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டல் மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரனுடன் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத்துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துரையாடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்துக்குள் நுழைந்து துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்; பலர் காயம் அடைந்தனர்.

அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாகப் பயங்கரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் உயர் விழிப்புநிலையில் இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!