பயங்கரவாத மிரட்டல்; மூடப்படும் ‘ஹலோ கிட்டி’கேளிக்கை பூங்கா

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ‘ஹலோ கிட்டி’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா சனிக்கிழமை ( பிப்ரவரி 24) மூடப்படும் என அப்பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

மின்னஞ்சல் மூலம் பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“எங்கள் வாடிக்கையாளர்கள், கலைஞர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான நேரம் இல்லாத காரணத்தால் பூங்கா தற்காலிகமாகச் சனிக்கிழமை மூடப்படுகிறது,” என்று ‘சேன்ரியோ புரோலேண்ட்’ பூங்கா அதன் இணையதளத்தில் தெரிவித்தது.

பயங்கரவாத மிரட்டலைத் தொடர்ந்து அப்பூங்காவைச் சோதனை செய்த அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!