கென்யாவில் எரிவாயு வெடிப்பு; 200க்கும் மேற்பட்டோர் காயம்

நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் பிப்ரவரி 2ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு வெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

நைரோபியின் எம்பாகாசி அக்கம்பக்க குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவுக்கு சற்று முன்பு வெடிப்பு நிகழ்ந்தது. அங்கு எரிவாயு நிரப்பும் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இந்த வெடிப்பில் நிறுவனத்தின் கட்டடம் சேதமடைந்ததாக ‘எக்ஸ்’ ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் அரசாங்கப் பேச்சாளர் ஐசக் முவாரா தெரிவித்தார்.

எரிவாயு வெடிப்பில் மூண்ட தீ அக்கம்பக்க வட்டாரங்களுக்கும் வேகமாகப் பரவியதால் ஜவுளி, ஆடை கிடங்குகள் நாசமாயின. பல வாகனங்களுக்கும் வர்த்தக, குடியிருப்பு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரை வெடிப்பில் கென்ய நாட்டவர்கள் இருவர் இறந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

ஒன்பது மணி நேரம் போராடி தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!