மகாதீரின் இன்னொரு மகனிடமும் சொத்து விவரங்களைக் கேட்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு முகவையின் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் இன்னொரு மகன் உட்படுத்தப்பட்டு உள்ளார்.

வர்த்தகரான மொக்ஸானி மகாதீரின் சொத்துகளை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடிதம் அனுப்பி இருப்பதாக ஆணையத்தின் பேச்சாளர் சனிக்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தார்.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் டாக்டர் மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான் மகாதீருக்கு ஆணையம் இதேபோன்ற ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தது.

1981ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் முதன்முறை பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திரு மொக்ஸானி ஈட்டிய வருமானத்தை விவரமாக அறிவிக்குமாறு அவரிடம் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இதுபோன்ற விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்று டாக்டர் மகாதீர் தெரிவித்து உள்ளார்.

உலக ஊடகக் கட்டமைப்பான அனைத்துலக புலன்விசாரணை பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு அண்மைய ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்த வர்த்தக ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டாக்டர் மகாதீரின் மகன்களுக்கு அது கடிதங்களை அனுப்பி சொத்து விவரங்களைக் கேட்டு வருகிறது.

அந்த வகையில், மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சரும் மகாதீர் முகம்மதுவின் முன்னாள் ஆலோசகருமான டையிம் ஸைனுதீனும் விசாரிக்கப்பட்டு வருகிறார். சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குவார் என்று மலேசிய ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!