மலேசிய முன்னாள் நிதி அமைச்சரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலாலம்பூர்: பல்வேறு சொத்துகள் குறித்து தெரியப்படுத்தத் தவறியதற்காக மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனின் மனைவியான நயிமா அப்துல் காலித், 66, மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூறப்படும் சொத்துப் பட்டியலில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ‘இல்ஹம் டவர்’ கட்டடம் மற்றும் ‘இல்ஹம் பாரு’ நிறுவனங்கள், மெர்சிடிஸ் கார்கள் இரண்டு, கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் பல்வேறு சொத்துகள் ஆகியவை அடங்கும்.

சத்தியப்பிரமாணத்தின் கீழ் அவர் மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி) வெளியிட்ட குறிப்பின் நிபந்தனைகளுக்கு உட்படாத வகையில் வேண்டுமென்றே எழுத்துபூர்வ அறிக்கை ஒன்றை அளித்ததாக நயிமா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து கோலாலம்பூரின் நீதிமன்ற அமர்வில் ஜனவரி 23ஆம் தேதியன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தற்காத்து வழக்காட உள்ளதாக நயிமா தெரிவித்தார்.

குற்றம் நிரூபணமானால் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையையும் 100,000 ரிங்கிட் (S$28,328) வரையிலான அபராதத்தையும் எதிர்நோக்கலாம்.

வியாபாரியாகவும் உள்ள டயிமுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட விசாரணையில் தங்களின் வாக்குமூலத்தை அளிப்பதற்காக நயிமா அவரின் இரு மகன்களுடன் ஜனவரி 10ஆம் தேதியன்று எம்ஏசிசி தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!