இரட்டை பாண்டா கரடிக்குட்டிகளை வரவேற்கும் தென்கொரியா

சோல்: தென்கொரிய விலங்கியல் தோட்டம் ஒன்று அண்மையில் அங்குப் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா கரடிக்குட்டிகளை வரவேற்றுள்ளது.

அந்த இரண்டு கரடிக்குட்டிகளும் தலைநகர் சோலுக்கு அருகில் உள்ள எவெர்லாண்டு கேளிக்கைப் பூங்காவில் பிறந்ததாக அவ்விலங்கியல் தோட்டம் காணொளி வழியாகக் கூறியது.

பாண்டா கரடிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு அழைப்பு விடுக்க இது நல்லதொரு தருணம் என்று விலங்கியல் தோட்டத்தின் தலைவர் சுங் டொங் ஹீ கூறினார்.

சீனா நல்லெண்ண அடிப்படையில் 1950களிலிருந்து பாண்டா கரடிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது.

தென்கொரியாவில் முதன்முதலில் கிட்டத்தட்ட மூவாண்டுகளுக்கு முன்னர் ‘ஃபு பாவ்’ பாண்டா கரடி பிறந்தது. அதன்பிறகு ‘ஃபு பாவ்’இன் பெற்றோருக்கே பிறந்த இரட்டை பாண்டா கரடிகள் இவை.

‘ஃபு பாவ்’ அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று தென்கொரிய விலங்கியல் தோட்டம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!