தென்கொரியாவுடன் செயல்படும் அமைப்புகளை மூடியது வடகொரியா

சோல்: வடகொரியப் பகுதியில் ‘0.001 மில்லிமீட்டர் கூட’ அத்துமீறப்பட்டால் போர் தொடங்கும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஒத்துழைப்பையும், ஒருங்கிணைவையும் மேற்பார்வையிடும் அமைப்புகளை பியோங்யாங் மூடியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.

அந்த இரு நாடுகளின் கடல் எல்லைப் பகுதியை பியோங்யாங் அங்கீகரிக்காது என்று திரு கிம் கூறினார்.

இதற்கிடையே சோலில், தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அணுவாயுத ஆயுதங்களைக் கொண்டுள்ள வடகொரியா சண்டையைத் தொடங்கினால், தென்கொரியா பல மடங்கு வலுவான பதிலடியைக் கொடுக்கும் என்று அவரது அமைச்சரவையிடம் கூறியிருக்கிறார். தமது ராணுவத்திற்கு உள்ள அளவுக்கு அதிகமான ஆற்றலை அவர் சுட்டினார்.

தென்கொரியாவுடனான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைவையும் மேற்பார்வையிடும் அமைப்புகளை மூடுவதற்கான முடிவை வடகொரிய நாடாளுமன்றம் அறிவித்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியது.

இருதரப்புக்கும் இடையே பதற்றநிலையை அதிகரித்துள்ள அண்மைய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றது அது.

ஆக அதிகம் எதிர்க்கப்படும் நாடாக தென்கொரியாவை வருணிக்க புதிய சட்ட நடவடிக்கைகள் வரையப்படவேண்டும் என்று திரு கிம் கேட்டுக்கொண்டதாகவும் செய்தி நிறுவனம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!