தலையங்கம்

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, நன்னடத்தையில் இருந்தும் பொறுப்பு, கடமைகளில் இருந்தும் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழிதவறி நடப்பது என்பது மிகமிக அரிதானது.
பணவீக்கம் அதாவது விலைவாசிப் பிரச்சினை பல அம்சங்களைப் பொறுத்தது. கொவிட்-19 காரணமாக உலகமே முடங்கிப்போய் சேவை, பொருள் விநியோகக் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து பணவீக்கம் ஏறுமுகமானது. அது தணியத் தொடங்கிய நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததால் நிலைமை மேலும் மோசமானது.
சிங்கப்பூர் சுதந்திரத்துடன் தனித்துவிடப்பட்டபோது அதற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைவர்கள், நாட்டில் எந்த இயற்கை வளமும் இல்லை என்றாலும் சிங்கப்பூரை உலகில் தலைசிறந்த நாடாக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.
சிங்கப்பூரின் மிக முக்கியமான ஒரே வளம் அதன் மக்கள்தான். சிங்கப்பூர் மக்கள் உலகில் ஆக அதிக ஆயுளைக் கொண்டவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் உலக அளவில் முதல் தரமானது.
உல­கெங்­கும் அண்­மைக்­கா­ல­மாக முதி­யோ­ரி­டையே வாழ்க்­கை­யில் பிடித்­த­மின்மை அல்­லது வெறுமை உணர்வு அதி­க­ரித்­து­வ­ரு­வ­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன. அதா­வது தங்­கள் வாழ்க்கை விரை­வில் முடி­வ­டை­வதை இவர்­கள் தீவி­ர­மாக விரும்­பு­கி­றார்­கள்.