சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிலவரப்படி, குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள கார்களின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.
சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை மலேசியாவின் ஜோகூர் மாநிலக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈசூன் அவென்யூ 8ல் 2029ஆம் ஆண்டுக்குள் புதிய பேருந்து பணிமனை கட்டப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கடல்நாகக் கருப்பொருளில் அமைந்த ஆளில்லா வானூர்திக் காட்சியின் முதல் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 10) அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் திரண்டதால் மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) நிர்வாகம் கூடுதல் கூட்ட நெரிசல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
சாங்கி பாயிண்ட் படகு முனையத்தில் 57 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிப்ரவரி 10ஆம் தேதி கடல் நீரில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.