உல‌க‌ம்

ஹனோய்: வியட்னாமிய வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியின் காரணமாக அந்நாட்டின் சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கி நொடித்துப்போகும் நிலையில் உள்ளது.
நேப்பிடாவ்: மியன்மாரின் முன்னாள் தலைவரும் நோபெல் பரிசு வென்றவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சி சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்ற 38 வயது ஹஃபிசுல் ஹராவி கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.
சிட்னி: ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ஆடவரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பிரான்ஸ் நாட்டவருக்கு ஆஸ்‌திரேலியக் குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் அண்டனி அல்பனிஸ் முன்வந்துள்ளார்.
தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.