இளையர் முரசு

தீபாவளித் திருநாளில் மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பண்டிகை குதூகலத்தில் திளைத்திருந்தபோது காவல்துறை சீருடையில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கம்பீரமாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டார் நிவேதா விஜயகுமார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி படிக்கும் வரை படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் கடுமையாக உழைத்து 4.69 தரப் புள்ளிகளுடன் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் முஹம்மது ஹம்சா சையது அகமது கபீர்.
இந்தோனீசியாவின் சுமத்ரா பகுதித் தேயிலைத் தோட்ட வரலாற்றுக்கு ஒலி வடிவம் தந்து ஒரு புதிய கலைப்படைப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ப்ரியகீதா தியா.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இளையர் பிரிவு, ‘சிறுகதைகளை எவ்வாறு பயில்வது?’ என்ற தலைப்பில் பொங்கோல் சமூக நூலகத்தில் இளையர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியது.
கலைகளில் சிறந்து விளங்க வயது ஒரு தடையன்று என்பதை நிரூபித்துவருகின்றனர் நவம்பர் 17 முதல் 26 வரை ‘எஸ்பிளனேட்’ ஏற்பாட்டில் நடந்த கலா உத்சவம் எனும் கலை விழாவில் பங்கேற்ற இளையர்கள்.