புதுடெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின் டி20, ஒருநாள் ஆட்டங்களில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இடம்பெறமாட்டாரகள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமையன்று இதைத் தெரிவித்தது. அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் ரோகித், கோஹ்லி இருவரும் விளையாடினர்.
தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் நடைபெறவுள்ள மூன்று டி20 ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணித்தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் கேஎல் ராகுல் அணித்தலைவராக இருப்பார்.
அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தொடரில் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்துக்கொள்ள ரோகித், கோஹ்லி இருவரும் தங்களிடம் கேட்டுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.