11 வயது சிறுமியை கொடுமைப்படுத்திக் கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

11 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தி கொன்ற வளர்ப்புத் தந்தைக்கு 15 ஆண்டுகள், 11 மாதம் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

தற்போது 29 வயதாகும் வளர்ப்புத் தந்தையான முகமது ஃபாசில் செலாமட், மெதுவாக சாப்பிட்ட சிறுமியை உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் கம்பியால் பல முறை தாக்கியிருக்கிறார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, நான்கு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

நவம்பர் 2020ஆண்டு நடந்த இந்த கொடூரச் சம்பவத்தில் சிறுமியின் தாயாரான தற்போது 30 வயதாகும் ரோஸ்லிண்டா ஜமில் தலையிடாமல் இருந்துவிட்டார். இவருக்கு ஏழு ஆண்டுகள், எட்டு மாதம் 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரோஸ்லிண்டாவும் ஃபாஸிலும் தங்களுடைய குற்றத்தை 2023 பிப்ரவரியில் நடந்த விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.

ரோஸ்லிண்டா ஜமீல், ஒரே வீட்டில் ஒரு குழந்தையின் இறப்பை அனுமதித்ததற்காக தண்டனை பெற்ற முதல் நபர் ஆவார்.

இந்தச் சட்டம், 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. துன்புறுத்தல்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கத் தவறியவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

முன்னதாக தம்பதியின் பெயரை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய பெயரை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை உயர் நீதிமன்ற நீதிபதி பாங் காங் சாவ் பிப்ரவரி 15ஆம் தேதி ஏற்றுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!