‘என்யுஎஸ் பட்டக் கல்வி முடித்த ஆடவரின் மரணம் துரதிர்‌ஷ்டவசமாக நிகழ்ந்தது’

தான் வசித்த கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின்கீழ் மாண்டுகிடந்த 23 வயது ஆடவரின் மரணம் துரதிர்‌ஷ்டமாக நிகழ்ந்தது என்று மரண விசாரணை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

அச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. சீனாவைச் சேர்ந்த சாவ் மிங்ஜியென் எனும் ஆடவர் கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின் 15வது தளத்திலிருந்து விழுந்து மாண்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் (என்யுஎஸ்) பட்டக் கல்வி முடித்திருந்த அவர், அப்போதுதான் புதிதாக வேலையில் சேர்ந்திருந்தார்.

தனது மகன் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என்று தான் நம்புவதாக திரு சாவின் தாயார் நீதிமன்ற விசாரணையின்போது கூறினார். மகனின் இறுதிச் சடங்கின்போது அவரின் நண்பர்கள் வெளியிட்டதாக நம்பப்படும் சில முரண்பாடான கருத்துகளை அவரின் தாய் குறிப்பிட்டுப் பேசினார்.

தனது மகன் வீட்டின் ‘பால்கனி’ பகுதியிலிருந்து விழுந்தபோது அங்கு இரு மர்ம நபர்கள் காணப்பட்டதாகச் சொல்லப்பட்டது; அது குறித்தும் திரு சாவின் தாய் பேசினார்.

எனினும், திரு சாவின் மரணத்தில் பிறர் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று மரண விசாரணை அதிகாரியான ஆடம் நக்கோடா 12ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!