அமைச்சர் சான்: நெறிமுறையுடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கற்பிக்கப்படுகிறது

தொழிற்திறன்களைத் தாண்டி, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடன் பயன்படுத்தப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது.

அத்துடன், மாணவர்களின் வயதுக்கேற்றவாறு இதைப் பள்ளிகள் அவர்களுக்குக் கொண்டு செல்லும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

“தொழில் அடிப்படையுடன் நெறிமுறை சார்ந்த அடிப்படையிலும் நாங்கள் செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.

இதில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சாதக பாதகங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதியன்று பேசிய திரு சான், செயற்கை நுண்ணறிவுப் பாடம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படலாம் என்றார்.

அதுபோல், உயர்நிலை மாணவர்களுக்குப் படைப்பாற்றல் வடிவில் செயற்கை நுண்ணறிவை தங்கள் பாடத்திட்ட வடிவமைப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திரு சான் தெளிவுபடுத்தினார்.

செயற்கை நுண்ணறிவை வேலையிடத்துக்குப் பயன்படுத்துவது, பொய்ச் செய்தியை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது, செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வியைத் தரநிலைப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மன்ற உறுப்பினர்கள் ஐவர் கேட்ட கேள்விகளுக்கு திரு சான் பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!