மிதிவண்டியில் தீவு விரைவுச்சாலையைக் கடக்க புதிய பாலம்

பீஷானுக்கும் நகர்ப்பகுதிக்கும் இடையே மிதிவண்டி ஓட்டிகள் பயணம் செய்யும்போது தீவு விரைவுச்சாலையைக் கடக்க அதிகச் சிரமத்திற்கு உள்ளாவதை அடுத்து 2027ஆம் ஆண்டு முதல் திறக்கப்படும் புதிய உயர்த்தப்பட்ட பாலம் ஒன்றின்வழி எளிதில் பயணம் செய்யலாம்.

இந்த 682 மீட்டர் நீள மிதிவண்டிப் பாலம், தீவு விரைவுச்சாலையின் 14 வழித்தடப் பகுதியைக் கொண்டுள்ளது.

காலாங் பூங்கா இணைப்பையும் பீஷான்-முதல்-நகர்ப்பகுதி வரையிலான மிதிவண்டிப் பாதை நீட்டிப்பையும் சேர்த்து 10 கிலோமீட்டர் நீள தடையற்ற பயணப் பாதையாக மாற்றும் நகர மறுசீரமைப்பு ஆணையத் திட்டத்தின் இறுதி அம்சம் இது.

ஆணையம் அக்டோபர் 5ஆம் தேதியன்று பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது.

அதிகப் போக்குவரத்து உள்ள சாலைச் சந்திப்பில் மிதிவண்டி ஓட்டுவது ஆபத்தானதோடு, ஐந்து போக்குவரத்து விளக்குகள் இருப்பதால் நேரம் விரயமாவதாகச் சில மிதிவண்டி ஓட்டிகள் தெரிவித்தனர்.

தங்களுக்கு இச்சிரமம் பழகிப் போய்விட்டது என்றாலும் புதிய பாலம் வரவேற்கத்தக்க திட்டம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!