புக்கிட் பாஞ்சாங்கில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வாகன விபத்து தொடர்பாக விசாரணை செய்யுமாறு ருமேனிய வெளியுறவு அமைச்சு அதன் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ருமேனியத் தூதரகத்தின் பொறுப்பாளர் இந்த விபத்துடன் சம்பந்தப்படுத்தப்படுவது இதற்குக் காரணம்.
ருமேனிய வெளியுறவு அமைச்சு நடத்திய உள் விசாரணையின் முடிவில், இச்சம்பவம் குறித்து சட்டப்படி குற்றவாளியை அடையாளம் காணவும், விபத்தின் சூழ்நிலையை அறியவும் வெளியுறவு அமைச்சால் இயலாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அதனால், வெளியுறவு அமைச்சு தனது உள் விசாரணையில் திரட்டப் பட்ட தகவல்கள் அனைத்தையும் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத் திடம் ஒப்படைத்து, விசாரணை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்ப தாகவும் அறிக்கை தெரிவித்தது.
இச்சம்பவத்தில், வழக்கறிஞர் அலுவலகத் திற்கும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கும் முழு ஆதரவு தர கடப்பாடு கொண்டிருப்பதாக அமைச்சு உறுதியளித்தது.
அரசதந்திர உறவுமுறை குறித்த வியன்னா ஒப்பந்தப்படி சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரப்படும் என்று அமைச்சு கூறியது.
அதோடு, சிங்கப்பூர் தூதரகப் பொறுப்பாளர் பதவியிலிருந்து திரு சில்வியூ இயோனிஸ்குவை ரொமேனிய வெளியுறவு அமைச்சு மீட்டுக் கொண்டுள்ளது.
விபத்தில் இரு ஆடவர்கள் காயமடைந்த தோடு, ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்து சில தினங்களுக்குப் பிறகு
திரு இயோனிஸ்கு ருமேனியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.
விபத்தில் சிக்கிய மூவரின் குடும்பத்தினரிட மும் ருமேனிய வெளியுறவு அமைச்சு மன்னிப்பும் கேட்டது.
சட்டத்திலிருந்து விலக்கு இல்லை
அரசதந்திர உறவு குறித்த வியன்னா ஒப்பந்தத்தின் பகுதி 31ன் முதல் பத்தி, (18 ஏப்ரல் 1961), “அரசதந்திர தூதர் செல்லும் நாட்டில் குற்றவியல் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று கூறுகிறது.
ஆனால், “அரசதந்திர தூதர் செல்லும் நாட்டின் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால், அனுப்பும் நாட்டின் சட்டத்திலிருந்து அவருக்கு விலக்கு கிடைக்காது” என்று பத்தி 4 கூறுகிறது.
எனவே, தூதர் சென்றிருந்த நாட்டில் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக, அவரது சொந்த நாட்டில் சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்படலாம்.
ருமேனியாவும் சிங்கப்பூரும் வியன்னா ஒப்பந்தத்தில் இடம்பெறுகின்றன.