பயணிகள் அடுத்த மாதம் முதல் தங்களுடைய மடக்கு சைக்கிள் களையும் மின்ஸ்கூட்டர் போன்ற வாகனங்களையும் பேருந்துகளி லும் ரயில்களிலும் எந்த நேரத் திலும் எடுத்துச்செல்லலாம். இதற்கு வகை செய்யும் ஆறு மாத கால பரிசோதனைத் திட்டம் அமலாகிறது. நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிக்கையில் இந்த விவரத்தை தெரிவித்தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இது பற்றி இந்த ஆண்டு ஜூலையில் முதன்முத லாக அறிவித்து இருந்தார். பொதுப் போக்குவரத்தை மேலும் பலர் பயன்படுத்த ஊக்க மூட்டும் முயற்சிகளில் இது மற் றொன்று என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவற்றை ரயில், பேருந்து களில் டிசம்பர் 1 முதல் மடக்கி எடுத்துச் செல்லலாம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்.