திருப்பதி: இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெட கொத்தப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் சுந்தர்பாபு என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அவர், சிறுமி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தார். அந்தச் சிறுமி, தப்பித்து பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அப்பகுதி மக்களுடன் சென்று தலைமையாசிரியரைத் தாக்கி, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவர் குழந்தைகளிடம் இதுபோல் பாலியல் செய்து அவற்றைத் தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்தது.