திருமண விருந்தில் ரசகுல்லா தீர்ந்ததால் சண்டை; அறுவர் காயம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்ஷாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அதனையொட்டி அப்பகுதி மக்களுக்கும் உறவினருக்கும் இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்குப் பல்வேறு உணவு வகைகள், ரசகுல்லா உட்பட பல இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.

அப்போது, ரசகுல்லா தீர்ந்துவிட்டதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த இருதரப்பினர் இடையே வாக்குவாதம் மூண்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் அறுவருக்குக் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!