மும்பை: இந்தியாவின் மராட்டியப் பேரரசா் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் (வாக் நஹ்) இப்போது பிரிட்டனில் இருக்கிறது. அந்த அரிய கலைப்பொருள் நவம்பரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
பேரரசா் சத்ரபதி சிவாஜி, தன்னைக் கொல்ல முயன்ற தனது அரசியல் எதிரியான அப்சல் கானை, இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழ்த்தினார். அந்தச் சம்பவம் 1659 ஆம் ஆண்டில் நடந்தது.
சத்ரபதி சிவாஜி அரியணை ஏறி இந்த ஆண்டுடன் 350 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் மும்பையில் மூன்று ஆண்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதற்காக புலிநகம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக மகாராஷ்டிராவின் கலாசார அமைச்சர் முன்கான்திவார் செவ்வாய்க்கிழமை லண்டன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.