‘டிசிஎஸ்ஸைவிட அதிகச் சம்பளம்’: பரவலாகும் சாலையோர உணவுக்கடை விளம்பரம்

புதுடெல்லி: இந்தியாவில் வேலை கிடைக்காத பட்டதாரிகளின் விகிதம் கூடியுள்ளதாக அண்மையில் ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், உதவியாளர் வேலைக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் தருவதாக சாலையோர உணவுக்கடையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அம்ரிதா சிங் என்ற ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) ஊடகவாசி அதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தி மொழியில் வெளியாகியுள்ள இப்பதிவுக்கு இணையவாசிகள் பலரும் வியப்பளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“ஊதியத்துடன் இலவசமாக ‘மோமோ’வும் சாப்பிடலாம்,” என்று ஒருவர் எழுதியுள்ளார்.

“டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தைவிட அதிக ஊதியம் தருகின்றனர்,” என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.

“நேரடி நேர்காணல் இடம்பெறுகிறதா?” என்று ஒருவர் கேட்டுள்ளார்.

அத்துடன், இணையவாசிகள் பலரும் அக்கடையின் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!