பற்றியெரிந்த கார்; நூலிழையில் உயிர்தப்பிய இருவர்

பெங்களூரு: சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மின்சாரக் கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றியதில், அதிலிருந்த இருவர் நூலிழையில் உயிர்பிழைத்தனர்.

சனிக்கிழமையன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகத்தில் பரவியது. இச்சம்பவத்தால் மின்சாரக் கார் வைத்துள்ளவர்கள் கவலையடைந்துளனர்.

நண்பர்கள் இருவர் அக்காரில் பயணம் செய்ததாகவும் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு காரிலிருந்து புகை கிளம்பியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

விரைவில் அக்கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதனைக் கண்டதும் காருக்குள் இருந்த நண்பர்கள் இருவரும் விரைந்து வெளியேறினர். இதனால், அவர்கள் காயமின்றித் தப்ப முடிந்தது.

குறுகிய நேரத்தில் மளமளவென அவ்வாகனம் தீக்கிரையானது அதனைக் கண்டவர்களுக்கும் அவ்வழியே சென்றோர்க்கும் அதிர்ச்சி அளித்தது.

காருக்குள் விலைமதிப்புமிக்க பொருள்கள் இருந்தன என்றும் அவையும் தீயில் கருகி சாம்பலாகின என்றும் காவல்துறை தெரிவித்தது.

தீ விபத்து குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது,

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!