‘ஜெய் ஹோ’ பாடல் சர்ச்சை முடிவுக்கு வந்தது

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஸ்லம்டாக் மில்லினர்’.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார் ரகுமான்.

இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ஜெய்ஹோ’ பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவில்லை என்று கூறினார்.

பாடகர் சுக்வீந்தர் சிங் தான் அந்தப் பாடலை உருவாக்கினார் என்றும் கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து சுக்வீந்தர் சிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘ஜெய் ஹோ’ பாடலை இசையமைத்தது ரகுமான் தான். குல்சார் பாடலை எழுதினார். ரகுமானுக்கு வார்த்தைகள் பிடித்திருந்தன. ஜூஹுவில் உள்ள எனது இசை அரங்கில் தான் இசை அமைத்தார் என்றார் சுக்வீந்தர் சிங்

‘ஜெய் ஹோ’ பாடலை வேறு படத்திற்காக உருவாக்கினார் ரகுமான். அந்தப் பாடல் கதைக்கு பொருந்தவில்லை என்பதால் அந்தப் பாடலை ரகுமான் பயன்படுத்தவில்லை என்று சுக்வீந்தர் சிங் குறிப்பிட்டார்.

“ பாடல் நன்றாக இருந்ததால், அங்கிருந்த பாடலாசிரியர் குல்சாரிடம் நான் பாடினேன். பின்னர், அதை ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பினேன். அதை டேனி பாய்லுக்கு அனுப்பினார் ரஹ்மான். இதுதான் நடந்தது. ராம் கோபால் வர்மாவுக்குத் தவறான தகவல் கிடைத்திருக்கும்,” என்று சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!