மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரங்களாகக் கருதப்படும் அர்ஜுனன், அபிமன்யு பாத்திரங்களை வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது.
இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
தமிழில் இதற்கான கதை, திரைக்கதையை எழுதும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இந்தி திரையுலகில் முன்னணியில் உள்ள கதாசிரியர் ஒருவர் அம்மொழி ரசிகர்களுக்கு ஏற்ப வசனங்களை எழுத உள்ளார்.
வட இந்தியாவின் முன்னணிப் படத்தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை பல்வேறு மொழிகளில் தயாரிக்க உள்ளது.